ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபாவளி பண்டிகையையட்டி திரையரங்குள் 5 காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கும். இந்த ஆண்டு 7 நாட்கள் வரை 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையட்டி 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதோடு தீபாவளி பண்டிகை அன்றும் 25 மற்றும் 26ந் தேதியும் அரசு விடுமுறை தினம் என்பதால் அன்றும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கி உள்ளது. எல்லா காட்சிகளையும் 9 மணியிலிருந்து இரவு 1.30 மணிக்குள் நடத்தி முடித்துக் கொள்ள வேண்டும். காட்சியின் நேர விபரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.