ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், வேலூர் பகுதிகள் நீங்கலாக தமிழ்நாடு முழவதும் கடந்த 5 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. மக்கள் தீபாவளிக்கு புது துணி, பட்டாசு வாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படி தியேட்டருக்குச் செல்வார்கள்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் கடந்த 5 நாட்களாக காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பல தியேட்டர்களில் இரவுக் காட்சியை ரத்து செய்து விட்டார்கள். ஓரளவுக்கு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருந்த ஜீவா, மெட்ராஸ், அரண்மணை படங்களின் வசூல்கள் கணிசகமாக குறைந்து விட்டது. தீபாவளிக்கு பிறகு தீபாவளி படங்கள் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள். இதனால் இந்தப் படங்கள் ஒரு சில தியேட்டர்களிலேயே ஓடிக் கொண்டிருக்கும்.
தீபாளிக்கு பிறகும் அடைமழை நீடித்தால் தீபாவளி படங்களின் வசூலும் கடுமையாக பாதிக்கப்படும். என்ன மழை பெய்தாலும் இளைஞர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள். ஆனால் பேமிலி ஆடியன்ஸ் வருவது குறைந்து விடும். இதனால் தீபாவளிக்கு பிறகு மழை குறைந்து தியேட்டர்கள் கலகலப்பாகுமா? என்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தீபாவளி பட தயாரிப்பாளர்கள்.