ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிகரம் தொடு படத்தில் வில்லனாக அறிமுகமானவர் விநாயக் ராஜ். தற்போது இடம்பொருள் ஏவல் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: சொந்த ஊர் பானவயல், சின்ன வயசிலிருந்தே நடிப்புன்னா வெறி அதுக்காக ஊரைவிட்டு ஓடிவந்து கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி வாய்ப்பு தேடவில்லை. நடிப்பை முறைப்படி படிக்கணுன்னு நினைச்சேன். புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல முறைப்படி நடிப்பு படிச்சு டிகிரி வாங்கினேன்.
அதற்கு பிறகு நடிக்க வந்தேன். சிகரம்தொடுவில் வில்லனா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு காட்சிக்காக 6 மணி நேரம் தலைகீழா கட்டி தொங்கவிட்டாங்க. கண்ணுலேருந்து ரத்தம் வந்தது பொறுத்துகிட்டு நடிச்சேன். அதுக்காகத்தான் இப்போ பலன் கிடைச்சிருக்கு.
இடம் பொருள் ஏவல்ல நடிக்கிறேன். சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்துலேயும் நடிக்கிறேன். கவுரவ் இயக்கும் அடுத்த படத்துலேயும் நடிக்கிறேன். கமல் சாரின் உதவியாளர், சீனிவாசன், பேரரசு, ஆகியோரின் படங்களில் நடிக்கிறேன். ரகுவரன், பிரகாஷ்ரா-ஜ் மாதிரி வில்லனாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் ஜெயிக்கணுங்றது£ன் என்னோட ஆசை. என்கிறார் விநாயக்ராஜ்.