ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜயசாந்தி மாதிரி அதிரடி ஆக்சன் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால திட்டமே. அதனால் தீவிரமாக சண்டை பயிற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் சதுரங்க வேட்டை பட நாயகி இஷாரா.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* பப்பாளி, சதுரங்க வேட்டை படங்களில் நடித்த பிறகு என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
அதிமேதாவிகள், பப்பரப்பம் என்ற இரண்டு படங்களில் நடிக்கிறேன். இதில் அதிமேதாவிகள் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கும் எனக்கு ஜோடியாக சுரேஷ் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். பப்பரப்பம் படத்தில் ராஜா என்பவருடன் நடிக்கிறேன். இந்த படம் 1987களில் நடக்கும் கதையில் உருவாகிறது. அதனால் அந்த காலகட்டத்து பெண்களின் கெட்டப்பில் எனது ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் மற்றும் நடை உடை பாவணைகள் அனைத்தையும் மாற்றி நடித்து வருகிறேன்.
சதுரங்க வேட்டை படத்தில் எப்படி அந்த கேரக்டருக்காக எனது உடல்கட்டையும் மெச்சூரிட்டியாக மாறி நடித்தேனோ, அதேபோல் இந்த படங்களில் கேரக்டர்களுக்காக எனது உடல எடையை 8 கிலோ குறைத்து நடித்து வருகிறேன். இந்த எடை குறைப்பிற்காக இரண்டு மாதங்களாக கடுமையான டயட்ஸ், உடற்பயிற்சி எடுத்தேன். இதேபோல் நான் செலக்ட் பண்ணி நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கேற்பவும் எனது உடல்கட்டை மாற்றி நடிப்பதோடு, மாறுபட்ட பர்பாமென்ஸையும் வெளிப்படுத்துவேன்.
* முதல் படம் ஹிட்டானபோதும் அதையடுத்து புதுமுக ஹீரோக்களுடன் நடிப்பதேன்?
விஜய், அஜீத், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால் இப்போது அதற்கான சாத்தியமில்லை. அதனால் எனது திறமையை வெளிக்கொண்டு வரும் கதைகள், கேரக்டர்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். எனது திறமையை நூறு சதவிகிதம் நான் வெளிப்படுத்தி நடிக்கிறபோது எனக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கும்.
அதனால் தான் இப்போதைக்கு நான் முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்று காத்துக்கொண்டிருக்காமல். கிடைத்த நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில், அதிமேதாவிகள் படமும் எனக்கு இன்னொரு சதுரங்க வேட்டை போன்று பெரிய ஹிட்டாக அமையும். அதோடு எனது பர்பாமென்சும் பேசப்படும். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிய அற்புதமான வேடத்தில் நடிக்கிறேன்.
* ஸ்ருதிஹாசன் போன்ற முன்னணி நடிகைகளே குத்தாட்டம் ஆடுகிறார்களே. அதுமாதிரி வாய்ப்புகள் வந்தால் ஏற்பீர்களா?
இப்போதெல்லாம் கதாநாயகிகள் குத்தாட்டமாடுவது சாதாரணமான விசயம்தான். ஆனால், நான் இப்போதுதான் வளரத் தொடங்கியிருக்கிறேன். அதனால் இந்த நேரத்தில் குத்தாட்டம் ஆடினால் என்னை குத்தாட்ட நடிகையாகவே முத்திரை குத்தி விடுவார்கள். அதனால் ஓரளவு வளர்ந்து நிற்கிறபோது மற்ற ஹீரோயின்களைப் போன்று நானும் குத்தாட்டம் ஆடுவேன். அதில் எந்த தயக்கமும் இல்லை.
* கிளாமரில் உங்கள் எல்லை எதுவரை?
கிளாமராக நடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்றெல்லாம் எந்த கண்டிசனும் என்னிடம் இல்லை. டைரக்டர்கள் எதிர்பார்க்கும் கிளாமரை வாரி வழங்க தயாராக இருக்கிறேன். நடிகையாக வேண்டும் என்று முடிவெடுத்தபோது, காலத்திற்கு ஏற்ற நடிகையாக வேண்டும் என்ற முடிவுடன்தான் சினிமாவில் இறங்கினேன். அதனால் பர்பாமென்சில் எப்படி உச்சம் தொட வேண்டும் என்று நினைக்கிறேனோ அதேபோல் கவர்ச்சியிலும் உச்சம் தொடுவேன். அதனால் டைரக்டர்கள் எந்த மாதிரியான அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கவும் என்னை தாராளமாக அணுகலாம்.
* தமிழ் தவிர வேறு என்னென்ன மொழிப்படங்கள் கைவசம் உள்ளன?
மலையாளம் எனது தாய்மொழியாக இருந்தாலும், நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் கிடைக்காததால் இன்னும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அதையடுத்து இன்னொரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. என்றாலும், இப்போதைக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கத்தான் முதலிடம் கொடுக்கிறேன்.
* எந்த நடிகையை முன்மாதிரியாக எடுத்திருக்கிறீர்கள்?
எனக்கு முன்மாதிரி என்று எந்த நடிகையும் கிடையாது. யார் நடிப்பு பிடித்திருந்தாலும் ரசிப்பேன். அதோடு, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரன் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பார். அது என்னை கவர்ந்த கதாபாத்திரம். அதேபோல் நானும், இளமையான கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல், கேரக்டர் பிடித்திருந்தால் குழந்தைக்கு அம்மாவாககூட நடிப்பேன்.
மேலும், என்னை பாதித்த நடிகைகள் என்று சொல்லிக்கொண்டு எந்த நடிகையின் நடிப்பையும் உள்வாங்கி நடிக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு நடிப்பேன். அந்தந்த கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அந்தமாதிரியான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்துவேன். அதோடு, நெகடீவ் வேடங்களில் நடிக்காமல் பாசிட்டீவ் வேடங்களாக நடிப்பேன். முக்கியமாக ஆக்சன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால திட்டம்.
* ஆக்சன் ஹீரோயின் என்றால் விஜயசாந்தி மாதிரியா?
அவர் மாதிரியெல்லாம் இன்னொரு நடிகை வருவது கஷ்டம். என்றாலும் அவர் நடித்தது போன்று ஆக்சன் நடிகையாக வேண்டும் என்ற ஆசை நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே உள்ளது. ஆனாலும் இப்போது அதற்கான முயற்சி எடுக்க வேண்டாம். ஓரளவு வளர்ந்த பிறகு யோசிக்கலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இந்த நேரத்தில் தற்போது ஒரு புதுமுக இயக்குனர் என்னை ஆக்சன் ஹீரோயினாக வைத்து படம் இயக்க முன்வந்துள்ளார்.
அதனால், தமிழில் எனது ஐந்தாவது படத்திலிருந்தே ஆக்சன் ஹீரோயினாக அவதரிக்க தயாராகி விட்டேன். இதற்கு முன்பு நடனத்தை மட்டுமே பயிற்சி எடுத்திருந்த நான் இப்போது சண்டை பயிற்சி எடுத்து வருகிறேன். தற்போது கைவசமுள்ள இரண்டு படங்களிலும் நடித்து முடிந்ததும், ஆக்சன் கதையில் நடிப்பேன் என்கிறார் இஷாரா.