ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் பெண்கள்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன்.
சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் வாங்க முயற்சிப்பேன். இதற்கு எப்படி நிதி திரட்டலாம் என்று யோசித்து வருகிறேன். எங்கள் சங்க உறுப்பினர்கள் பலர் வேலையின்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் பல சேனல்கள் இந்தி, கொரியன், ஜப்பானிய சீரியல்களை டப் செய்து ஒளிபரப்புகிறது. இதனால் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது. இது குறித்து சேனல்களுடன் பேச இருக்கிறேன். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்தால் ஒண்ணறை நாள் கால்ஷீட்டாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற தயாரிப்பாளர்களை வற்புறுத்த இருக்கிறேன் என்கிறார் நளினி.