ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடித்து தன் கீச்சு குரலால் புகழ்பெற்றவர் சுஜாதா. கிராமத்து அம்மா, அண்ணி, அக்கா என்றால் இன்றைய தேதிக்கு சுஜாததான் பெஸ்ட் சாய்ஸ். 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கோலிசோடாவின் ஆச்சி கேரக்டர் சமீபத்தில் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு பிடித்த கேரக்டரில்தான் நடிப்பேன் என்கிறார் சுஜாதா. அவர் கூறியதாவது:
என் கணவர் பாலகிருஷ்ணன் மக்களுக்கு கருத்து சொல்றமாதிரி சின்ன சின்ன நாடகங்கள் போடுவார். வள்ளி வழக்கு என்று ஒரு நாடகம் அதுல நடிக்க வேண்டிய பொண்ணு ஒரு நாள் வரவில்லை. வேற வழியில்லாம நானே என் கணவருக்கு ஜோடியா நடிச்சேன். அப்புறமாக நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். விருமாண்டி படத்துக்கு கமல் சார் கேரக்டர் தேடுறப்போ என்னை கண்டுபிடிச்சி நடிக்க வச்சார். அதுல பசுபதி மனைவியா நடிச்சேன். அதுல நான் டப்பிங் பேச முடியாம போச்சு. அதுதான் என்னை அடையாளம் காண முடியல. அப்புறம் பருத்தி வீரன்ல நடிச்சப்போதான் அடையாளம் கிடைச்சுது தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.
கேரக்டருக்கு என்ன தேவையோ அதை யதார்த்தமா நடிக்கிறதுதான் என்னோட வேலை. எனக்குத் தெரியும் இந்த கேரக்டர் எனக்கு செட்டாகும், செட்டாகாதுன்னு அதனால எனக்கு பிடிச்சு, என்னால நடிக்க முடியும்னு தோணுற கேரக்டர்ல மட்டும்தான் நடிக்கிறேன். நான் நடிச்ச படத்தை விட நடிக்க மறுத்த படங்கள்தான் அதிகம். செலக்ட் பண்ணி நடிக்கிறதாலதான் என்னோட நடிப்பை எல்லோரும் பாராட்டுறாங்க. என்னை பொருத்தவரைக்கும் குடும்பம்தான் முக்கியம். சினிமா இரண்டாவதுதான் என்கிறார் சுஜாதா.