ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சேது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அட்டகாசம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்ஷன் மானேஜராக இருந்தவர் கே.முருகானந்தம். அவர் இப்போது முருகாற்றுப்படை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சரவணன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நவிக்கா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
தான் ஒரு புரொடக்ஷன் மானேஜரா இருந்து இயக்குனராக மாறியதை பலர் ஏற்கவில்லை என்று முருகானந்தம் வருத்தத்துடன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
25 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். இயக்குனராகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். அதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் வாழ்க்கை நடத்துவதற்காக புரொடக்ஷன் பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். பாலா சாரின் ரூம் மெட்டாக இருந்தேன். அதனால் சேது படத்தில் அவர் என்னை புரொடக்ஷன் மானேஜராக்கினார். 50 படங்கள் வரை வேலை பார்த்திருக்கிறேன்.
25 வருடமும் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருந்திருக்கிறேன். எனக்கு கதை எழுதத் தெரியும். அதை எப்படி படமாக எடுக்க வேண்டும் என்று ஷூட்டிங் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். நான்கு படத்தில் உதவி இயக்குனரா இருப்பவர் ஒரு படம் இயக்கும்போது 50 படத்துக்கு மேல் அருகில் இருந்து பணியாற்றிய என்னால் இயக்க முடியாதா?.
இவனெல்லாம் படம் எடுக்க வந்துட்டான்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அதனாலதான் ஆடியோ பங்ஷனுக்கு நிறைய பேர் வரவில்லை. அவுங்க முன்னாடி ஒரு இயக்குனராக ஜெயிச்சுக் காட்டணும்னு தோணுது. சினிமா பற்றி தெரிஞ்ச யார் வேணாலும் இயக்கலாம். பாலா சார் சாதாரணமாக இருந்துதான் இன்று பெரிய இயக்குனர் ஆனார். பெரிய பணக்கார வீட்டு பையன் சசிகுமார் இன்னிக்கு பெரிய இயக்குனராகியிருக்கார். அவுங்க அளவுக்கு இல்லேன்னாலும் என்னாலும் படம் இயக்க முடியும்னு காட்டுறதுக்குத்தான் இந்த படத்தை இயக்கினேன் என்கிறார் முருகானந்தம்.