ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டில்லியின் சமாலா பொருட்கள் விற்பனை செய்யும் பகுதியான சவ்ரி பஜாரில் சமீபத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அனுபம் கர், அன்னு கபூர் மற்றும் பியூஸ் மிஷ்ரா ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். அந்த படத்தின் கதைப்படி, பியூஸ் மிஷ்ரா மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியாம். அதனால் இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது மசாலா காரத்தின் வாசனை தாங்க முடியாமல் அனுபம், அன்னு மற்றும் பியூஸ் ஆகியோர் தும்மிக் கொண்டே இருந்தார்களாம். தாங்கள் நடிக்கும் சீனின் ஒத்திகை முடிந்ததும் 3 பேரும் மூக்கில் துணியை கட்டியபடியே இருந்தனராம். அந்த மசாலாக்களில் காரத்தன்மை அதிகம் இருந்ததே அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட காரணமாம்.