ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
வறுமையில் வாடுகின்ற பெண்களுக்கு உதவும் விதமாக வாக்எம்பவர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத் பங்கேற்றார். அப்போது பெண்கள் மத்தியில் பேசிய கங்கனா, இன்றைக்கு வறுமையில் வாழும் பல பெண்களுக்கு போதிய கல்வியறிவோ, அல்லது அவர்கள் எந்த மாதிரியான வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை பற்றியோ விழிப்புணர்வோ அவர்களுக்கு இல்லை. அதனால் நான் அதுப்பற்றிய சில ஆலோசனைகளை வழங்கலாம் என்று நினைக்கிறேன். அதுவும் எங்கள் துறையான சினிமாவைப்பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் திரையில் பார்ப்பதற்கும், நிஜத்தில் அங்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் பெண்கள் மோலோட்டமாக சினிமாவை பார்த்துவிட்டு அந்தபுதைக்குழியில் விழுந்துவிடக்கூடாது. மேலும் சினிமாவிற்கு அழகு தேவை என்று பலரும் கூறுகின்றனர். அதிலும் சினிமாவில், பெண்களுக்கு அழகு தான் தகுதியாக இருக்கிறது என்று கருதுகின்றனர். என்னைப்பொறுத்தவரை பெண்களுக்கு அழகு தேவை தான். அதோடு திறமையும் வேண்டும், திறமை இல்லையென்றால் அவர்களுக்கு மதிப்பில்லை. ஆகவே திறமை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும், வெறும் அழகு அல்ல என்று கூறினார்.