ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. தகர்த்தவர் வேறு யாருமல்ல...ஐ படத்தின் தயாரிப்பாளர்தான். இதை ஷங்கரே மனம் குமுறி சொல்லி இருக்கிறார்... 2013 ஆம் ஆண்டு தீபாவளிக்கே ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தயாரிப்பு தரப்பின் சில காரணங்களுக்காகவே படம் எடுக்க இவ்வளவு காலம் ஆனதாகவும் கூறி உள்ள ஷங்கர், ஏறக்குறைய ஒரு வருடமாக சும்மாவே இருப்பதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த இடைவெளியில், அவருடைய அடுத்த படத்திற்கான 3 கதைகளை எழுதி முடித்துவிட்டாராம்.
ஐ படத்தை எடுப்பதற்கு தான் நீண்டகாலம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படும் கருத்தையும் ஷங்கர் மறுத்திருக்கும் ஷங்கர், இதுநாள் வரை தயாரிப்பாளர் சொல்லி வந்த பொய்யையும் அம்பலப்படுத்திவிட்டார். அதாவது, ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தயாரிப்பாளர். ஷங்கரோ,ஐ படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் கிடையவே கிடையாது. 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிலேயே ஐ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஐ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் தரப்பில் சில பிரச்சனைகள் இருப்பதால் நவம்பர் மாதத்தில் ஐ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.




