ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக சினிமாவில் கதை களம் என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள். அது கதை நடக்கும் இடத்தை, சூழ்நிலையை குறிக்கும், இப்போது அந்த களத்தை பற்றியே ஒரு படம் எடுக்கிறார்கள். படத்தின் பெயரும் களம்தான். ஜீவா சங்கரிடம் உதவியாளராக இருந்த ராஜ் இயக்குகிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். ஸ்ரீனி, அம்ஜெத், லட்சுமி பிரியா, மது சூதனன் நடிக்கிறார்கள். இதில் அம்ஜெத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்.
"களம் ஒரு களத்தை பற்றிய கதைதான். அந்த களத்தில் என்ன நடக்கிறது என்பது திரைக்கதை. அமானுஷ்ய சக்திகள் பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கிறது. அது காற்றாகவோ, பேயாகவோ, ஏதோ ஒன்றாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு களம்தான் அமானுஷ்ய சக்தி. புதுமையான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. ஆரி அலெக்சா கூக்ஸ் எஸ் 4 என்ற நவீன கேமரா கொண்டு படமாக்கி வருகிறோம்" என்கிறார் இயக்குனர் எஸ்.ராஜ்.