ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் நூற்றெண்பது, வெப்பம் படங்களில் நடித்த நித்யாமேனனுக்கு, மாலினி 22 பாளையங்கோட்டை ஓரளவு பெயர் வாங்கிக்கொடுத்தது. தனது உருவத்துக்கும், உயரத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு அதிரடியான வேடத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார் நித்யாமேனன்.
அதையடுத்து அவர் நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பாவின் மீசை, கங்கா-3 ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நித்யாமேனன், தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அதனால் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார் நித்யா.
காரணம், சினிமாவுக்கு வந்து 6 வருடங்களில் 35 படங்களில் நடித்து விட்டேன். ஆனால் மணிரத்னம் சொன்ன கதை என்னை ரொம்ப ஈர்த்து விட்டது. சாதாரணமாகவே அவரது படங்களில் பீல் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் சிற்பி போன்று செதுக்குவார். அப்படிப்பட்ட அவரது படங்களை இதுவரை பார்த்து ரசித்து வந்த எனக்கு இப்போது அவர் இயக்கத்தில் நடிக்கப்போகிறேன் என்பது பெரிய மகிழ்ச்சியை தருகிறது. அதோடு, நானும் நடிக்க தெரிந்த நடிகைதான் என்கிற அங்கீகாரம் இப்போதுதான் எனக்கு கிடைத்திருப்பதாக உணர்கிறேன் என்கிறார் நித்யாமேனன்.