அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் ஒரே படத்கதில் சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறார்களாம்.
இவர்கள் நடிக்கும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் அமைப்பதற்கு தர உள்ளனராம். இது பற்றி விஷால் கூறுகையில், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ரவி மற்றும் நான் எல்லோரும் இணைந்து ஒரே படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் தொகையை நடிகர் சங்க கட்டிடம் கட்ட தர முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்கத்திற்கு நிரந்தரமான கட்டிடம் கட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் சமீபத்தில் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தின் போது சந்தித்து கொண்ட நாங்கள் இது போன்று படம் பண்ண முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பின் இந்த புதிய படத்தின் பணிகளை துவங்க உள்ளனராம். இந்த 5 ஹீரோக்கள் இணையும் இந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.