ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (அக் 11) நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2014- 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமாரே மீண்டும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டடார். செயலாளராக குஷ்பு சுந்தரும், பொருளாளராக டி.ஆர்.பாலேஷ்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடிகை குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஈ.ராம்தாஸ், டி.வி.சங்கர் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், பி.ராதா, சுஜாதா கோபால், வினயா கிருஷ்ணன், ரவி, கே.ஜி.ஜெயவேல், ஆர்.சதீஷ், பி.சீனிவாசன், எஸ்.சுந்தர், பி.சீனிவாசலு, ஏ.எஸ்.வெங்கடாசலம், ஜி. ஜெயகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஏவிஎம்.சரவணன், டி.ஜி.தியாராஜன், அழகன் தமிழ்மணி ஆகியோர் சங்கத்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டனர்.