ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போன்று, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்க இருக்கிறது. சுமார் 8 அணிகள் விளையாட இருக்கின்றனர். சச்சின், கங்குலி, அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், ஹிருத்திக் ரோசன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலர் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். இதில் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளராக அபிஷேக் பச்சன், தோனி மற்றும் விதா தானி ஆகியோர் உள்ளனர்.
சென்னையின் எப்சி அணியின் உடை அறிமுக விழா நடந்தது. இதில் சென்னையின் எப்சி அணிக்கான நீல நிறை உடையை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அபிஷேக், விதா தானி ஆகியோருடன் சென்னையின் எப்சி அணிக்கான ஸ்பான்ஸரான ஓசோன் குரூப் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீனி கோபாலனும் பங்கேற்றனர். கூடவே சென்னை அணியின் வீரர்களான கவுராமங்கி சிங், போஜன், பெர்ணார்டு மெண்டி, அபிஷேக் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக், இந்தநாள் மகிவும் முக்கியமான நாள். சென்னையின் எப்சி அணியின் உடையை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். எங்களது அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளனர். வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம். இந்தியன் கால்பந்து தொடர், உலகளவில் நடத்தப்படும் கால்பந்து போட்டிகளுக்கு இணையாக இருக்கும் என்றார்.
விதா தாணி பேசுகையில், எங்களது அணிக்கு, ஓசோன் குழுமத்தார் ஸ்பான்சர் செய்திருப்பதும், இந்திய சூப்பர் லீக்கில் ஓசோனும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றி எங்களது அணியின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம். நிச்சயமாக இந்தியன் சூப்பர் கால்பந்து லீக் உலகதரத்தில் இருக்கும் என்றார்.