ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இலங்கையில் யுத்தம் நடந்தபோது இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று குடிபுகுந்த நாடுகளில் ஒன்று நார்வே. இங்கு கணிசமான அளவில் ஈழத் தமிழர்கள் வசிக்கிறார்கள். வசீகரன் சிவலிங்கம் என்பவர் தமிழ் படங்களை வாங்கி அங்கு விநியோகித்து வருகிறார். ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவையும் அங்கு நடத்தி வருகிறார்.
அவர் தற்போது முழுக்க முழுக்க நார்வேயில் தயாரிக்கப்பட்டு, நார்வே வாழ் தமிழர்களால் நடிக்கப்பட்டு, நார்வே தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு நார்வேயிலேயே திரையிடப்பட்டுள்ள ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் பெயர் 9சி ஆஸ்லோ (ஆஸ்லோ என்பது நார்வேயின் தலைநகர்) திரு இசை அமைத்திருக்கிறார், துருபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஸ்ரீபன் இயக்கி இருக்கிறார். ஜெயசாந்த், அபிநயா, நிதுசா, செழியன், இந்துஜன், சமீலா உள்பட 25 நார்வே தமிழர்கள் நடித்துள்ளனர்.
இதுபற்றி வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: நார்வேயில் சினிமா ஒரு கலையோ, தொழிலோ அல்ல இருந்தாலும் புலம் பெயர்ந்த தழிழர்களின் கலை ஆர்வத்தை பிரதிபலிப்பதற்காக இதனை தயாரித்துள்ளேன். பணி நேரம் போக மீதி நேரத்தில் யாருமே எந்த சம்பளமும் பெறாமல் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார்கள். இது ஒரு புதிய முயற்சியாகும். எங்கள் உழைப்பை, திறமையை காட்ட இதனை தமிழ்நாட்டில் திரையிடவும் உத்தேசித்துள்ளோம் என்கிறார்.