ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரபரப்பு இயக்குனர் ராம்கோபால் வர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இயக்கி வரும் சாவித்ரி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதில் ஒரு சிறுவன் ஒரு பெண்ணின் தொப்புள் மற்றும் பின் பகுதியை மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஆந்திரா முழுவதும் பெண்கள் அமைப்பிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அது இப்போது தீவிரமடைந்துள்ளது.
அகில இந்திய பெண்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பு விசாக பட்டினத்தில பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தியது. பின்னர் ஜாகதம்மா ஜங்கஷனில் ராம்கோபால் வர்மாவின் கொடும்பாவியை கொழுத்தி அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது. "படிக்கும் வயதிலும், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டிய வயதிலும் இருக்கும் சிறுவன் தன் ஆசிரியையை தவறாக பார்க்கும் படியான போஸ்டர்கள் சிறுவர்கள் மனதில் விஷத்தை தூவுகிற செயல். இந்த படத்தை ஆந்திராவில் வெளிவர விடமாட்டோம். போஸ்டர்கள், இணைய தள பதிவேற்றங்களை அவர் அகற்றாவிட்டால் போராட்டம் தொடரும்" என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் பத்மாவதி.
ராம்கோபால் வர்மா விளக்கம்:
இது தொடர்பாக ராம்கோபால் வர்மா அளித்துள்ள விளக்கம் வருமாறு: நான் என் சிறு வயதில் சரஸ்வதி என்ற ஆசிரியை மீது ஈர்ப்பு வைத்திருந்தேன். இதை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன். அவரே தவறாக எடுத்துக் கொள்ளாதபோது இவர்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் இருப்பது டீச்சர் அல்ல. அந்த காட்சியில் நடித்திருக்கும் சிறுவன் ஒரு புரபஷனல் நடிகன். அவர்கள் பெற்றோர் உடனிருக்க அந்த காட்சியில் நடித்தான். போஸ்டரில் இருப்பது டீச்சர் என்று குறிப்பிட்டு குழந்தைகள் நல அமைச்சகம் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதனை சட்டப்படி சந்திப்பேன் என்கிறார்.