ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரீ-என்ட்ரியிலும் செம கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. ஆரம்பம், ராஜா ராணி படங்களின் வெற்றி அவரை பிசியாகி விட்டிருக்கிறது. அதிலும் வித்யாபாலன் நடிப்பில் வெளியான கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா படத்தில் நடித்த பிறகு நயன்தாரா மீது இயக்குனர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது.
அதனால்தான் தற்போது இது நம்ம ஆளு, நண்பேன்டா படங்களில் வழக்கமான கதைகளில் நடித்தபோதும், ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனி ஒருவன், ஆரியாவுடன் நடிக்கும் நைட் ஷோ ஆகிய படங்களில் வெளியிட்டான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் நயன்தாரா. தனி ஒருவன் படத்தைப் பொறுத்தவரை பிரத்யேக சண்டை பயிற்சியெல்லாம் எடுத்து நடித்து வருகிறார். அவருக்கும், ஜெயம்ரவிக்குமிடையே கூட சண்டை காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், நைட் ஷோ படத்தில் ஆக்சன், த்ரில்லர் கதையில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட அனாமிகா படத்தில் நடித்தது போன்று வெயிட்டான வேடத்தில் நடித்துள்ள நயன்தாராதான் இந்த படத்தில் பிரதான ரோல் செய்திருக்கிறார். அதனால் அவரது கேரியர் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக தனது நடிப்பில் இது நம்ம ஆளு, நண்பேன்டா, நைட் ஷோ, தனி ஒருவன், மாஸ் என வரிசையாக படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வர இருப்பதால் செம உற்சாகத்தில் இருக்கும் நயன்தாரா, மேலும் புதிய படங்களில் கமிட்டாவதற்கும் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.