ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம் மாத்வானி இயக்கும் புதிய படத்தில் கஜோல் நடிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் படத்திற்கு ஏற்பட்ட பணப்பிரச்னை மற்றும் இயக்குநருக்கும், கஜோலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் இப்படம் துவங்கப்படாமல் இருந்தது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கான் இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டாராம், இதனால் கஜோல் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே இயக்குநர் ராம் மாத்வானி, கஜோலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார், அதன்படி இப்படத்தில் மாதுரி தீட்சித் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது கரீனா கபூர், இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராம் மாத்வானி சமீபத்தில், கரீனா சந்தித்து, தனது படத்திற்கான கதையை கொடுத்துவிட்டு வந்துள்ளாராம். கரீனாவும் கதையை படித்து பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளாராம். அதனால் விரைவில் கரீனா, இப்படத்திற்கு சம்மதம் சொல்வார் என தெரிகிறது.