ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், மெலும் இரண்டு தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்தது. இதுவரை 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படிப்பிடிப்புகள் ஊட்டியில் நாளை தொடங்குகிறது. விஷால், ஹன்சிகா தொடர்பான காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்த யுவன் படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக 5 இசை அமைப்பாளர்களை களம் இறக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார். 5 பேருமே புதுமுகங்கள்தான். ஹிப் ஆப் தமிழா ஆல்பம் புகழ் ஆதி ஒரு இசை அமைப்பாளர். ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ஒருவரும் இசை அமைக்கிறார். இவர்கள் தவிர இன்னும் 3 இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார் சுந்தர்.சி. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும்.