ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து நடித்த 'வந்தே மாதரம்' ஆல்பம் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்றவர் பரத் பாலா. எண்ணற்ற விளம்பரப் படங்களை இயக்கியவர் கடந்த ஆண்டுதான் திரைப்பட இயக்குனராக தமிழில் அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமான 'மரியான்' மேக்கிங்கில் பேசப்பட்டது என்றாலும் கதை சொன்ன விதத்தில் ரசிகர்களைக் கவர முடியாமல் தோல்விப் படமாக அமைந்துவிட்டது. ஏ.ஆர். ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தாலும் அது படத்தின் வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவியாக அமையவில்லை.
அடுத்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பரத் பாலா ஒரு கதையை உருவாக்கியிருக்கிறாராம். அனேகமாக அந்த படத்தில் 'ஜிகர்தண்டா' புகழ் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தில் நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்த சிம்ஹா தற்போது 'உறுமீன்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கும் 'இறைவி' படத்திலும் அவர் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே பரத்பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையுமா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரகுமான் இசையில் சீக்கிரமே நடிக்கும் வாய்ப்பு சிம்ஹாவுக்குக் கிடைத்துவிட்டது என்று அவருடைய ரசிகர்கள்(?) பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.