'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
ஐ.நா சபையை சேர்ந்த கலை மற்றும் கலாச்சார குழுவினர், உலகம் முழுவதும் பெண்கள் சினிமாவில் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி 4 ஆண்டுகள் ஆய்வு செய்தார்கள். அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவில் 95 சதவிகித பெண்கள் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். கிளாமர் காட்டுவதற்கென்றே ஹீரோயின்களை தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
வித்யாபாலன், ப்ரியங்கா சோப்ரா போன்ற நடிகைகளில் நல்ல கேரக்டர்களில் நடித்தாலும் அடிப்படையில் அவர்களின் கவர்ச்சியே முன் வைக்கப்படுகிறது. நல்ல நடிகைகளின் கவர்ச்சி குறையும்போது அதனை புதுமுகங்களை வைத்து ஈடுகட்டுகிறார்கள். இந்த தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாமா ஆய்வு செய்வார்கள் என்ற பெரூமூச்செல்லாம் வேண்டாம். அறிக்கையில் சொல்லப்படும் உண்மையை உணரவேண்டும்.