பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் யூத்தான ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார். தமிழில் துல்கர் சல்மான் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் இன்னும் முடிவாகவில்லை. நித்யாமேனன், ஸ்ருதி ஹாசன், ஆலியா பட், ஆகியோர் ஹீரோயின்களின் பரிசீலனை பட்டியலில் இருக்கிறார்கள்.
வருகிற 6ந் தேதி சென்னையில் பட்ப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செய்து வருகிறது. முறைப்படியான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று தெரிகிறது. மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவதை பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.