வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் யூத்தான ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார். தமிழில் துல்கர் சல்மான் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் இன்னும் முடிவாகவில்லை. நித்யாமேனன், ஸ்ருதி ஹாசன், ஆலியா பட், ஆகியோர் ஹீரோயின்களின் பரிசீலனை பட்டியலில் இருக்கிறார்கள்.
வருகிற 6ந் தேதி சென்னையில் பட்ப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செய்து வருகிறது. முறைப்படியான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று தெரிகிறது. மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவதை பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.