ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா மற்றும் பலர் நடிக்க 'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது தமிழ்த் திரையுலகில் ஷங்கர், தெலுங்குத் திரையுலகில் ராஜமௌலி ஆகியோரைத்தான் பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஷங்கர் 'முதல்வன்' படத்தை 'நாயக்' என்ற பெயரில் இயக்கி அங்கு வெற்றி பெற முடியாமல் திரும்பி வந்துவிட்டார். அதன் பின் அவர் ஹிந்திப் படங்கள் பக்கமே போகவில்லை. அவர் இயக்கிய தமிழ்ப் படங்கள்தான் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன. 'எந்திரன்' படமும் அங்கு டப் செய்யப்பட்டு வெளியானது. இப்போது 'ஐ' படமும் டப் செய்யப்பட்டு ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. தென்னிந்திய இயக்குனர்களைப் பொறுத்தவரையில் ஹிந்தியிலும் சென்று வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சிலருக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதனிடையே, இயக்குனர் ராஜமௌலி ஹிந்திப் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருக்கிறார். “எனக்கு ஒரு ஆமீர் கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. அவரும் அதை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியின் ஆசையை ஆமீர் நிறைவேற்றுவாரா...?