ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜா 2007ம் ஆண்டு வெளிவந்த 'சிறுத்தா' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதையடுத்து 2009ல் வெளிவந்த 'மகதீரா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்குக் கொண்டு போய் வைத்தது. தொடந்து சில தெலுங்குப் படங்களில் நடித்து தற்போது முன்னணி இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படம் நாளை வெளிவர இருக்கிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராம்சரண் அடுத்த ஆண்டில் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளாராம். அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராம் சரண் நடித்த 'மகதீரா' படம் 'மாவீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இங்கும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படமும், அவருடைய அடுத்த படங்களும் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அவருக்கு இங்கும் ஓரளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ராம்சரணின் அப்பாவான சிரஞ்சீவி கூட ஆரம்ப காலத்தில் தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான். ரஜினிகாந்த் நடித்த 'ராணுவ வீரன்' என்ற படத்தில் வில்லனாகவும், பாலச்சந்தர் இயக்கிய '47 நாட்கள்' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தவர். இன்றைய பல தெலுங்கு இளம் ஹீரோக்கள் தமிழில் நடிக்க ஆசைப்படும் நிலையில் ராம்சரண் முதலில் தமிழுக்கு வருகிறார்.