ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எழுத்துத் துறையில் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை பாராட்டி அவருக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஒரு அங்கமான திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மாநாடு சென்னையில் வருகிற செப்டம்பர் 15ம்தேதி நடக்கிறது. இந்த விழாவில்தான் முதல்வர் கருணாநிதிக்கு விருது வழங்க திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் கூறியதாவது:
அகில இந்திய திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் கலந்துக் கொண்ட கூட்டம் தர்மேஷ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த திரை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவில் மற்ற தொழில்களில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேர அளவைப் போல், சினிமா தொழிலுக்கும் 8 மணி நேரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை 10 சதவீதத்திலிருந்து கூடுதலாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு தலைமையைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்க இருப்பதாகவும் குகநாதன் தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் வரும் நிதியை திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும், என்றும் அவர் கூறினார்.