ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தை தயாரித்து இயக்கியவர் லிங்குசாமி. அந்த படத்தை இயக்கி வரும்போது அவர் ஒரு பேட்டியில், இதுவரை நான் சினிமாவில் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் கொட்டி இந்த அஞ்சான் படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறினார். ஆனால், அப்படி அவர் சொன்ன அஞ்சான் படம் படுதோல்வி அடைந்து விட்டது. குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றி விட்டது.
அதனால், அந்த படம் வெளியாகி தியேட்டர்களை விட்டு ஓட்டமாக ஓடி விட்டபோதும், லிங்குசாமியைப்பற்றி ரசிகர்கள் விமர்சிப்பதை இன்னும் நிறுத்தவில்லை. இது லிங்குசாமியை மட்டுமின்றி டைரக்டர் வெங்கட்பிரபு, நடிகர் விஜயசேதுபதி ஆகியோரை ரொம்பவே பாதித்துள்ளது. அதனால் உங்கள் விமர்சனங்களையும், கலாய்ப்புகளையும் நிறுத்திக்கொள்ளுங்கள் எனறு அவர்கள் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விஜயசேதுபதி வெளியிட்டுள்ள செய்தியில், இங்கே திரைப்படங்களை விமர்சிக்கும் உரிமை அனைவருக்குமே உள்ளது.ஆனால், அது சம்பந்தப்பட்டவர்களை புண்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
வெங்கட்பிரபு கூறுகையில், எல்லா படங்களையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்குகிறோம். ஆனால் சில சமயங்களில் தோல்வியை தவிர்க்க முடிவதில்லை. அதேபோல்தான் இந்த அஞ்சான் படமும் தோற்று விட்டது. மேலும், இயக்குனர்கள் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுளே பல சமயங்களில் தப்பு செய்கிறார்,. அதனால் அஞ்சான் டைரக்டர் லிங்குசாமியை கலாய்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
மேலும், நீங்களெல்லாம் நல்ல ரசிகர்களாக இருந்திருந்தால் தங்க மீன்கள் படத்தை வெற்றி பெறச்செய்திருக்க வேண்டும். தப்பான படத்தை விமர்சிக்கும் நீங்கள், நல்ல படத்தை ஆதரிக்க வேண்டுமே. ஆனால் அப்படி செய்யவில்லையே? என்றும் கேள்வி கேட்டுள்ளார் வெங்கட்பிரபு.