ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்துக் கொண்டிருந்த அபினிதா, கற்பவை கற்றபின் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் "தமிழ் படங்களில் தமிழ் நடிகைகள் மட்டும்தான் நடிக்க வேண்டும்" என்று அதிரடி பேட்டியெல்லாம் கொடுத்தார். படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தன் மகள் கடத்தப்பட்டு விட்டதாக அபினிதாவின் தந்தை பெருமாள், தாய் கற்பகம் ஆகியோர் வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். உடனடியாக போலீஸ் விசாரணையில் இறங்கியபோது அபினிதா பட்டுக்கோட்டையை சேர்ந்த மகேஷ் என்பவரை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததும். அவருடன் பட்டுக்கோட்டைக்கு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனால் பட்டுக்கோட்டை சென்ற வளசரவாக்கம் போலீசார், அங்கு நடிகை அபினிதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேஜர் பெண் என்பதும். விருப்பத்தின்படியே அவர் ரமேசுடன் வந்து திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அபினிதாவின் பெற்றோர் கடத்தல் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அபினிதா தன் காதல் கணவர் மகேசுடன் பட்டுக் கோட்டையிலேயே வாழ்வது என்று முடிவு செய்து அங்கேயே தங்கி விட்டார். இதனால் நேற்று கோடம்பாக்கத்தில் ஏற்பட்ட ஒரு நாள் பரபரப்பு அடங்கியது.