பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்தார். குழந்தை ஆராத்யாவை கவனிக்க வேண்டியது இருந்ததால் சினிமாவை தவிர்த்தார்.
இப்போது ஆராத்யா சுயமாக இருக்க பழகிவிட்டதால் நடிக்கும் முடிவிற்கு வந்துவிட்டார். மணிரத்னம் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக சொன்னார். ஆனால் மணிரத்னம் இன்னும் படத்தை தொடங்கவில்லை. இந்த நிலையில் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது. நடிக்கவும் தொடங்கிவிட்டார். ஜாஸ்பா ஒரு ஆங்கில படத்தின் ரீமேக். இதில் இர்பான்கான், அனுபம் கெர், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு படம் ரிலீசாகிறது.