வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்தார். குழந்தை ஆராத்யாவை கவனிக்க வேண்டியது இருந்ததால் சினிமாவை தவிர்த்தார்.
இப்போது ஆராத்யா சுயமாக இருக்க பழகிவிட்டதால் நடிக்கும் முடிவிற்கு வந்துவிட்டார். மணிரத்னம் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக சொன்னார். ஆனால் மணிரத்னம் இன்னும் படத்தை தொடங்கவில்லை. இந்த நிலையில் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது. நடிக்கவும் தொடங்கிவிட்டார். ஜாஸ்பா ஒரு ஆங்கில படத்தின் ரீமேக். இதில் இர்பான்கான், அனுபம் கெர், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு படம் ரிலீசாகிறது.