ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அஞ்சலியின் கை எலும்பு முறிந்தது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாவிட்டாலும் அஞ்சியின் மவுசு மட்டும் கூடியது. அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அஞ்சலி. கனி என்ற கிராமத்து பெண் கேரக்டரால் ஆண்கள் மட்டுமல்ல... பெண்களையும் கவர்ந்த அஞ்சலி, இப்போது மகாராஜா, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஜா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடந்தது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு ஸ்கூட்டி ஓட்டும் காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த அஞ்சலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அஞ்சலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்த டாக்டர்கள் கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைக்கு கட்டு போடப்பட்டது. தற்போது அஞ்சலி 15 நாள் ஓய்வில் இருக்கிறார்.