14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'இவருக்கு என்னதான் ஆச்சு....' என்ற டயலாக் யாருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெலுங்கு, இந்திப் படங்களின் இயக்குனரான ராம்கோபால் வர்மாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டு திரையுலகிற்குள்ளேயே பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களை அனைவரும் கருத்து சொல்வதற்காகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கண்டபடிப் பேசித், திட்டி, கிண்டலடித்து எழுதி வருவது அவருக்கு பலத்த எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. சினிமாவைப் பற்றி மட்டுமல்லாது, கடந்த சில மாதங்களில் பத்திரிகையாளர்களைப் பற்றியும், விநாயகரைப் பற்றியும் கிண்டலடித்து அவர் போட்ட பதிவுகள் கடும் கண்டனத்தைச் சம்பாதித்து வருகின்றன. ஏன் இவர் இப்படி செய்கிறார்...என பலரும் புரியாத புதிராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் மகேஷ் பாபு, தமன்னா நடித்து வெளிவந்த 'ஆகாடு' திரைப்படத்தைப் பற்றி ராம்கோபால் வர்மா ஓவராக கிண்டலடித்து பலத்த எதிர்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, சமந்தா இதற்கு முன் மகேஷ் பாபு நடித்த படத்தின் போஸ்டரைப் பற்றி ஒரு டுவிட்டர் போட்டதற்கே மகேஷ் பாபு ரசிகர்கள் கொதித்துப் போயினர். தற்போது அந்த கொதிப்பு, ராம்கோபால் வர்மாவின் புதிய டுவிட்டர் பதிவால் மேலும் அதிகரித்துள்ளது.
'ஆகாடு' படத்தைப் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “'ஆகாடு' படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை பிரகாஷ்ராஜ் தவறவிட்டிருக்கிறார், அவருக்காக நான் வருந்துகிறேன். படத்தில் உள்ள வசனங்களுக்கும், வசன உச்சரிப்புகளுக்கும் இந்தப் படத்தை சிறப்பு விருதுகளுக்காக ஆஸ்காருக்கு அனுப்பலாம். இயக்குனர் சீனு வைட்லாவும், மகேஷ்பாவும் கதையைச் சொல்லியிருக்கும் விதத்தில், லியானார்டோ டி கார்ப்பியோ, இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்செசி ஆகியோரின் ஆன்மீக உடலுறவை ஞாபகப்படுத்துகின்றனர். மகேஷ் பாபுவின் ரசிகர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், அவரை சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்கச் சொல்லுங்கள், ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர்....,”என்று பயங்கரமாக கிண்டலடித்திருக்கிறார்.
ராம்கோபால் வர்மாவின் இந்த கிண்டலுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இது எங்கே போய் முடியப் போகிறதோ...