ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2 ந் தேதி முதல் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா நாட்டின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதில் இந்த ஆண்டு நான் சிவப்பு மனிதன் படம் திரையிடப்படுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
விஷால், லட்சுமிமேனன் நடித்த இந்தப் படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்தாலும் நார்கோலெப்ஸி எனப்படும் தூக்க வியாதி தொடர்பான படம் என்பதால் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நான் சிவப்பு மனிதனை திரு இயக்கி இருந்தார். படம் கமர்ஷியலாக சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.