ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்பட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி. தற்போது கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். பார்வதி, மலையாள நடிகைகளில் மிகவும் போல்டானவர். தனக்கு பிடிக்காத கேரக்டர் எதுவாக இருந்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்காதவர். அவர் தற்போது தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். முடியை குட்டையாக வெட்டி புதிதாக மூக்கு கண்ணாடியும் அணிந்திருக்கிறார். இது எந்த படத்திற்குமான கெட்அப் இல்லையாம். அவருடைய ஒரிஜினல் தோற்றமாம்.
இதுகுறித்து பார்வதி கூறியிருப்பதாவது: படத்துக்கு படம் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்து போரடித்துவிட்டது. நீளமான கூந்தலும், அதன் பராமரிப்பும் என் சுதந்திரத்தை பறிப்பதாக நினைத்தேன். அதுதான் குட்டையா வெட்டிவிட்டேன். கண்ணில் எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும் கண்ணாடி அணிவது பிடிக்கும் என்பதால் ஜீரோ பவர் கண்ணாடி அணிந்திருக்கிறேன்.
மலையாளத்தில் காஞ்சனமாலா என்ற நிஜ பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறேன். இதற்காக அவரை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக மலையாளத்தில் நடிக்கவில்லை. காரணம் எனக்கு ஏற்ற கேரக்டர்கள் அமையவில்லை. தற்போது என்னு நின்ட மொய்தீன் படத்தில் பிருத்விராஜுடன் நடித்து வருகிறேன் என்கிறார் பார்வதி.