ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வீராச்சாமி படத்தில் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பத்து பத்து, உனது விழியிலே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விபசார வழக்கு, தன்னிடம் உல்லாசம் அனுபவித்த தொழில்அதிபருடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியது உள்ளிட்ட விவகாரங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தது என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்தவர் மாடலிங் அழகியும், நடிகையுமான பத்மா நாராயணன். இவர் தனது பெயரை லஸ்யா என மாற்றிக் கொண்டு புழல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
அம்மணிக்கு சமீபமாக குடல்வால் ஆபரேஷன் நடந்திருக்கிறது. அதை ரகசியமாக செய்துகொண்டு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்கும் லஸ்யா கூடிய விரைவில் கவர்ச்சியில் நமீதா இடத்தை பிடிப்பேன் என சபதம் செய்திருக்கிறாராம்.
நமீதாவிற்கும், லஸ்யாவிற்கும் நிறையவே ஒற்றுமை! உருவத்தில் மட்டுமல்ல... நமீதா மாதிரி லஸ்யாவிற்கும் தாய்மொழி குஜராத்திதான். ஆனால் தந்தைமொழி மட்டும் கும்பகோணம் தமிழ் என்பது கூடுதல் சிறப்பு. மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் என கால்டஜன் கவர்ச்சி ஆட்சி புரியவிருக்கும் லஸ்யா, தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளில் இருந்த நீதிமன்றம் வாயிலாக கடந்த ஆண்டே விடுதலை ஆகி விட்டேன் என்கிறார்.