ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்வதேச அளவில் புகழ் பெற்ற திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொள்ள இந்தியப் படங்களைத் தேர்வு செய்யும் பணியை இந்தியத் திரைப்பட சம்மேளனம் ஆரம்பித்துள்ளது. அந்தந்த மாநில மொழிகளிலுள்ள தயாரிப்பு சங்கங்கள் அவர்கள் மொழிப் படங்களை இந்தியத் திரைப்பட சம்மேளனத்திற்கு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் கடைசியாக இந்திய அளவில் தேர்வு செய்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்புவார்கள். அந்த விதத்தில் தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், 'மனம் மற்றும் மினுகுருலு' படங்களை பரிந்துரைத்துள்ளது.
'மனம்' படத்தை விக்ரம் குமார் இயக்க ஏ.நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். 'மினுகுருலு' படத்தை அயோத்யா குமார் இயக்க ஆசிஷ் வித்யார்த்தி, சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற படமாகும்.
ஏற்கெனவே ஒரு சர்வதேச விருதைப் பெற்றுள்ளதால் 'மினுகுருலு' படம் 'மனம்' படத்தை விட ஆஸ்கருக்கான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த கதையம்சமும், நடிப்பும் கொண்ட 'மினுகுருலு' படத்திற்கு அதற்கான தகுதியும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், 'மினுகுருலு' ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டால் விருது நிச்சயம் என்கிறார்கள் தெலுங்குத் திரையுலகினர்.