ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். அந்தவகையில், ஒரு மாடலின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐ கதை உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும் ஒரு நடிகரை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட ரஜினி, கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானெலலாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி அப்போது நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன். ஆக, 5 வருடத்திற்கு முன்பே இந்த கதையை ஷங்கர் ரெடி பண்ணி விட்டார் என்றார் ரஜினி.