சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். அந்தவகையில், ஒரு மாடலின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐ கதை உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும் ஒரு நடிகரை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட ரஜினி, கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானெலலாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி அப்போது நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன். ஆக, 5 வருடத்திற்கு முன்பே இந்த கதையை ஷங்கர் ரெடி பண்ணி விட்டார் என்றார் ரஜினி.