ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மண்வாசனை இயக்குனர் தயாரிக்கும் படமொன்றை இயக்கி வந்தார் அந்த காதல் கோட்டை இயக்குனர். அந்த படத்தில் தனது மகளையே நாயகியாக ஒப்பந்தம் செய்த அவர் அவுட்டோருக்கும் கிளம்பினார். ஆனால், மேற்படி இயக்குனர்கள் இருவருக்கும் கதையை படமாக்கும் விசயத்தில் ஏகப்பட்ட அக்கப்போராம். ஆளுக்கொரு கருத்தை சொல்ல, இப்போது இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அவுட்டோரில் இருந்து மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு திரும்பி வந்து விடடாராம் காதல்கோட்டை. இதையடுத்து, அவர்களின் கருத்து மோதலை சரிசெய்யும் பேச்சுவார்த்தை சீரியசாக நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தாமரை இலை தண்ணீர் போலத்தான் இரண்டு பேருமே உருண்டு கொண்டிருக்கிறார்களாம்.