ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாளை (செப் 15) ஐ படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் முழுக்க முழுக்க வடசென்னை பகுதி மக்கள் பேசும் பிரத்யே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அந்தப் பாடலை எழுதிய கவிஞர் கபிலன் கூறியிருப்பதாவது:
படத்தின் கதைக்கு ஏற்றபடி வட சென்னை பேச்சுத் தமிழில் ஒரு பாடல் வேண்டும் என்று சங்கர் சார் கேட்டார். வடசென்னையை சேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக அந்த பாட்டு சூழல். இதற்காக வடசென்னை பகுதியில் ஒருவாரம் வரை சுற்றித் திரிந்து அந்த மக்களின் பிரத்யேக வார்த்தைகளை கண்டுபிடித்து அதை வைத்து அந்தப் பாடலை எழுயிருக்கிறேன். கொடைக்கானல் மலை உச்சியில் அமர்ந்து ஷங்கர் சாரும் நானும் இதை முடித்தோம். பாட்டை கேட்டுவிட்டு இந்த பாட்டு உங்களை உச்சத்திற்கு கொண்டு போகும் என்றார்.
நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா முட்டை
ஒரு மாட்டுகொம்பு மேல
பட்டாம்பூச்சி போல...
என்று அந்த பாட்டு தொடங்கும். இதை இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். அதே போல "என்னோடு நீயிருந்தால்.." பாடல் ஆண் பாடுவது போலவும் பெண் பாடுவது போலவும் எழுதியிருக்கிறேன். அந்த பாடல் இது...
என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத் தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர்போல
உன்னை தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?
இவ்வாறு கபிலன் கூறினார். இதற்கு முன் ஷங்கரின் பாய்ஸ், அந்நியன் படங்களுக்கும் கபிலன் பாடல் எழுதியிருக்கிறார்.