ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதா பாசு இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு படத்திற்கு தேசிய விருதும் பெற்றவர். அதனால் அவரை பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். ஸ்வேதா பாசுக்கு ஆதரவாக இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். தற்போது தீபிகா படுகோனேவும் சுவேதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். குடும்ப கஷ்டத்தை போக்க விபச்சாரத்தில் ஈடுபட்டால் தவறில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் சுவேதா அப்படிச் செய்துள்ளார். அது தவறில்லை. மக்கள் அவரை பற்றி தவறாக பேசுவது நியாயமற்றது. நிர்க்கதியற்ற நிலையில் ஒரு பெண்ணால் வேறு என்ன செய்ய முடியும்.
ஸ்வேதாவை குறை சொல்கிறவர்கள் அவரை அந்த குற்றத்தை நோக்கி தள்ளியவர்கள் பற்றி ஏன் பேசுவதில்லை. ஸ்வேதாவை எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நான் உள்பட யாருமே அவருக்கு உதவி செய்ய வில்லையே. எனவே அவரைப் பற்றி தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்யுங்கள் என்கிறார் தீபிகா.