மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
1993ல் ஜென்டில்மேன் படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதையடுத்து, காதலன், இந்தியன், ஜீன்ஸ். முதல்வன் என தொடர்ந்து மெகா ஹிட் படங்களாக இயக்கியவர் நண்பனோடு 20 படங்களை இயக்கி விட்டார். அதையடுத்து தனது 21வது படமாக ஐ படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம்-எமிஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ விழா நாளை (15-ந்தேதி) சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஹாங்காங்கில் இருந்து தனி விமானத்தில் இன்று சென்னை வந்து சேருகிறார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பின்னர், சென்னையிலுள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் இன்று இரவு தங்கி விட்டு நாளை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அர்னால்டு சென்னைக்கு வந்திறங்குவது முதல், விழா முடிந்து திரும்பிச்செல்வது வரை அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.