ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முதல்வர் கருணாநிதியின் பேரனை போலீஸ்காரராக நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் வி.சி. வடிவுடையான். சாமிடா படத்தை இயக்கியவர் டைரக்டர் வி.சி.வடிவுடையான். அந்த படத்தை தொடர்ந்து அவர் புதிதாக இயக்கி வரும் படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் உருவாகும் இப்படத்தின் நாயகனாக சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கரண். அவருக்கு ஜோடி அஞ்சலி. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் இப்படத்தில் முதல்வர் கருணாநிதியின் பேரன் மு.க. அறிவுநிதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி டைரக்டர் வடிவுடையான் கூறுகையில், முதல்வரின் பேரன் இதற்கு முன்பு பெருமாள், திட்டக்குடி படங்களில் பின்னணி படியிருக்கிறார். அவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து பலமுறை அணுகினேன். தம்பி வெட்டேத்தி சுந்தரம் படத்தின் கதையை கேட்டதும் ஓ.கே. சொல்லி விட்டார். படத்தில் சூசையப்பன் எ்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் அறிவுநிதி நடிக்கிறார். அவரது கேரக்டர் கண்டிப்பாக பேசப்படும் விதமாக இருக்கும், என்றார்.
ஜே.எஸ். 24 பிரேமஸ் சார்பில் ஜே.செந்தில்குமார் தயாரிக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்.