ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருப்பவர் அர்ஜூன். தற்போது தான் ஏற்கனவே நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். அர்ஜூன் என்றாலே தேசப்பற்று கொண்ட கதைகளில்தான் அதிகமாக நடிப்பார். ஆனால் இந்த படத்தில் கல்வியை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார்.
பள்ளிக்கூடங்களெல்லாம் வியாபார தலங்களாகி விட்டதை முன்னிறுத்தி இந்த படம் உருவாகியிருப்பதாக சொல்லும் அர்ஜூன், இதுவும் ஒருவிதத்தில் தேசத்தை மையமாகக்கொண்ட கதைதான். இந்திய தேசம் முழுவதும் இந்த கல்வி பிரச்சினை உள்ளது. அதனால் கல்வியை வியாபாரமாக்குவது தவறு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கதை செல்கிறது.
இப்படி சொல்லும் அர்ஜூனிடத்தில், சமீபகாலமாக அதிக படங்களில் நீங்கள் நடிக்கவில்லையே ஏன்? என்று கேட்டால், படவாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் எனக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் தவிர்த்துக்கொண்டு வருகிறேன். எனக்கு பொருந்தக்கூடிய கதையாக இந்த ஜெய்ஹிந்த்-2 படத்தை நானே இயக்கி நடித்து வருகிறேன். இனி எப்போதுமே வலுவான வேடங்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். வாய்ப்பு வேண்டும் என்பதற்காக என் இமேஜை கெடுக்கும் வேடங்களில் நடிக்கமாட்டேன்.
மேலும், தற்போதைய சினிமா மாறி விட்டது. ரசிகர்களும் மாறி விட்டார்கள். படத்தைப்பார்த்து விட்டு அவர்களே விமர்சனம் செய்யும அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அதனால் இந்த வளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் சினிமாவுக்கு உள்ளது என்று கூறும் அர்ஜூன், எதிர்காலத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டப்போகிறேன் என்கிறார்.