Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

40 லட்சம் விவகாரம்! காஜல்அகர்வால்-உதயநிதி மோதல்!!

12 செப், 2014 - 10:04 IST
எழுத்தின் அளவு:

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கயிருந்த படம் நண்பேன்டா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் காஜல் அகர்வால்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதோடு ரூ. 1 கோடியே 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அட்வான்சாக 40 லட்சமும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காஜல்அகர்வால் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படம் தோல்வியடைந்ததோடு, அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லாததால், அவருக்குப் பதிலாக நண்பேன்டா படத்திற்கு நயன்தாராவை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார் உதயநிதி. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.


இந்த நிலையில், நண்பேன்டா படத்துக்காக தான் கொடுத்த 40 லட்சம் பணத்தை காஜல்அகர்வாலிடம் உதயநிதி கேட்டபோது, மறுத்து விட்டாராம் காரணம் கேட்டதற்கு, நண்பேன்டா படத்திற்காக 40 நாட்கள் கால்சீட் ஒதுக்கியிருந்தேன். ஆனால் திடீரென்று என்னை நீக்கி விட்டதால் என்னால் உடனடியாக வேறு படங்களில் கமிட்டாக முடியவில்லை. இதனால் அந்த 40 நாட்களும் வீணாகி விட்டது என்று சொன்னவர், அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர மறுத்து விடடாராம்.


அதனால் தற்போது பணத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் உதயநிதி. அதைத் தொடர்ந்து காஜல்அகர்வாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவரிடமிருந்து பதில் வந்ததும் இந்த விவகாரத்தை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளார்களாம்.


ஆனால் இதுகுறித்து காஜல்அகர்வால் தரப்பில் விசாரித்தபோது, உதயநிதி அளித்த புகார் பற்றிய கடிதம் இன்னும் வந்து சேரவில்லை. அப்படி வந்ததும் உதயநிதி மீது நாங்களும் நடிகர் சங்கத்தில் புகார் அளிப்போம் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளாராம்.


ஆக இவர்கள் போடும் சண்டையைப் பார்த்தால், இந்த 40 லட்சம் விவகாரம் அத்தனை சீக்கிரத்தில் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in