மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே சக நடிகர்களை போட்டி மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைதான் இருந்து வருகிறது. அதிலும் சில ஹீரோக்களின் படங்கள் தோற்று விட்டால், எதிர்பார்ட்டி நடிகர்கள், அதை பார்ட்டி வைத்து கொண்டாடும் அவல நிலையும் இதே கோடம்பாக்கத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், சக நடிகர்களை போட்டியாளர்களாக கருதாமல் நண்பர்களாக பாவித்து, அவர்களது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் சில நடிகர்களும் நம்முடைய கோடம்பாக்கத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் விஷால், ஆர்யா இருவரும் முக்கியமானவர்கள்.இவர்களில் ஆர்யா, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ஜீவா என்ற படத்தை தயாரித்துள்ளார். விஷால், அந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
நேற்று சென்னையில் ஜீவா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, ஆர்யா பேசும்போது, கிரிக்கெட்டை மையமா வச்சு ஒரு படம் பண்ணப்போறோம்னு சொன்னாங்க. டைரக்டர் சுசீந்திரன், ஹீரோ விஷ்ணு என்றதும் நான் கதையை கூட கேட்காமல் தயாரிக்க சம்மதிச்சேன். படம் முடிஞ்சதும் விஷால் பார்த்துட்டு ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொன்னார். அதனால் படம் கண்டிப்பா ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு நெனைக்கிறேன் என்றார்.
பின்னர் விஷால் பேசும்போது, இந்த படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு கிரிக்கெட் வீரரோட உணர்வுகளை அழகா வெளிப்படுத்தியிருக்காரு டைரக்டர். நிஜத்தில் கிரிக்கெட் வீரரான விஷ்ணு கிரிக்கெட் வீரராகவே வாழ்ந்துள்ள இந்த படம் கண்டிப்பாக அவருக்கு பெரிய திருப்புமுனையா அமையும்னு எதிர்பார்க்கிறேன். அதோடு, இந்த படத்தை வாங்கி என்னோட விஷால் பிலிம் பேக்டரி மூலம் நானே வெளியிடுறேன் என்றார்.