சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு "அளவுக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தேவையா? இல்லையா?" என்ற விவாதம் நடந்தது. இதற்கு டாக்டர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு விளக்கம் அளித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அந்தோணி கூறியிருப்பதாவது:
நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறது. அதில் மக்களை நேரடியாக பாதிக்கும் மருத்துவமும், கல்வியும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அளவுக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தேவையா? என்ற கேள்வியை நீயா நானா நிகழ்ச்சி மட்டும் எழுப்பவில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்கிறார்கள். அவர்களது ஆய்வுகள் கேட்கிறது. அதன் அடிப்படையிலேயே நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.
இந்திய மருத்துவத்துறை பொதுநல சுகாதாரத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளது. அதை யாரும் மறுக்கவில்லை. தனியார் மயமாக்கலுக்கு பிறகு மற்ற துறைகள் போலவே மருத்துவதுறை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை மீடியாக்கள் மட்டும் சொல்லவில்லை. டாக்டர்கள் சேதுராமன், ஜீவானந்தம், பல்ராம் பார்கவா, சமீரன் நந்தி போன்றவர்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இதுபோன்ற விவாதங்களுக்கு மருத்துவர்கள் எதிராக இருப்பது ஏன் என்று புரியவில்லை. என்கிறார் அந்தோணி.