ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். இவர் கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. அப்படி வந்த ஒரு படம்தான் மூன்றாம் உலகப்போர். இதில் சுனில்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சுகன் கார்த்தி இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பின் போது ஒரு குழந்தையை கொண்டு வந்து கொடுத்து அதை தூக்கிக் கொண்டு நடந்து வருவது போன்று நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அகிலாவுக்கு எதுவும் புரியவில்லை. படத்தின் கதை சொல்லும்போது குழந்தை ஷாட் சம்பந்தமாக எதுவும் சொல்லவில்லையே என்று இயக்குனரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.
"இது படத்தின் கடைசி காட்சி. கடைசியில் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாகி நடந்து செல்வது போன்ற காட்சி" என்று விளக்கம் அளித்திருக்கிறார். "கதை சொல்லும்போது ஒரு குழந்தைக்கு அம்மா என்ற டாபிக்கை நீங்கள் சொல்லவில்லை. அம்மாவாக நடிக்க மாட்டேன். இப்போதே என்னிடம் சொல்லாத காட்சிகளை எடுக்கிறீர்கள். இனி எடுக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் படப்பிடிப்பிலிருந்து சென்றுவிட்டார்.
அதன் பிறகு படப்பிடிப்பு குழுவினர் அவரை சமாதானம் செய்து ஸிகிரிப்ட்டில் உள்ள காட்சிதான் எடுக்கப்படும். குழந்தைக்கு அம்மா என்கிற கான்செப்டில் மாற்றம் செய்து விட்டோம். தேவைப்பட்டால் வசனத்தில் வைத்துக் கொள்கிறோம் என்ற உத்தரவாதம் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.