ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் இயக்கி இந்த மாதம் திரைக்கு வரவிருக்கும் ஜீவா திரைப்படத்தில், கவிப்பேரரசு வைரமுத்து, மதன்கார்க்கி, கபிலன்வைரமுத்து மூவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒரு தந்தையும் அவரது இரண்டு புதல்வர்களும் ஒரே படத்தில் பாடல் எழுதுவது உலக சினிமாவில் இதுவே முதல் முறை என்று உறுதியாக சொல்லலாம்.
மகன்களோடு போட்டியா? என்று வைரமுத்துவிடம் கேட்டதற்கு “ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை - மூவருக்கும் ஒவ்வொரு பாணி - இதில் போட்டிக்கு இடமில்லை” என்று சிரிக்கிறார். கபிலன்வைரமுத்துவிடம் அதே கேள்வியைக் கேட்டதற்கு “இந்த படத்தின் ஆறு பாடல்களும் ஒரே இரத்தத்தில் இருந்து வருபவை. ஆறு பாடல்களையும் அப்பாவுடைய வெவ்வெறு பரிமாணங்களாகப் பார்க்கிறேன்” என்று ஒரே போடாக போடுகிறார்.
படத்தின் ஆறு பாடல்களில் வைரமுத்துவும் கபிலன்வைரமுத்துவும் தலா ஒரு பாடலும் மதன்கார்க்கி நான்கு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதியிருக்கும் ”ஒவ்வொன்றாய் திருடுகிறாய்” பாடல் மனதைத் திருடுகிறது. காதல் தோல்வியைப் பாடும் ”ஒரு ரோசா உன்ன லூசா” என்ற மதன்கார்க்கியின் பாடல் ஒரு மாஸ் சாங்கிற்குரிய இலட்சணங்களோடு இருக்கிறது. கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் ”சங்கி மங்கி ஆடும்” என்ற பாடல் காதலைச் சொல்வதற்கு முன் இருக்கும் மனநிலையை ஓர் ஆரவார இசையோடு ஆனந்தமாகப் பாடுகிறது.
இமானின் பன்முக இசையில், கவிஞர் குடும்பத்தின் மும்முனைப் பங்களிப்பில் ஜீவா பாடல்கள் இசை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.