ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சரணுக்கும், சிவகாசி சபையர் லித்தோ பிரஸ் உரிமையாளர் ஞானசேகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில் திருநெல்வேலியில் ஆயிரத்தில் இருவர் படப்பிடிப்பில் இருந்த சரணை போலீசார் கைது செய்தனர். படப்பிடிப்பு தளத்திலேயே சரண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஆகியவை இணைந்து கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு சபையர் லித்தோ பிரஸ்சுடன் யாரும் தொழில் உறவு முறை தொடர்பு கொள்ள கூடாது என்று அறிவித்தனர்.
தற்போது இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் "இயக்குனர் சரணின் கைது நடவடிக்கைக்கு சபையர் லித்தோ பிரஸ் ஞானசேகரன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இனி சபையர் லித்தோ பிரஸ் தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்னையை தயாரிப்பாளர் சங்கம் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். போஸ்டர் அடிக்கும்போது இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சபையர் லித்தோ பிரஸ்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.