ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு மூலம் தமிழ் சினிமாவின் இளவட்ட நடிகர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியிருக்கிறது. அதுவரை பிரிந்து கிடந்த இவர்கள் அந்த விளையாட்டுக்குப்பிறகு ஈகோ என்பதில்லாத நண்பர்களாகி விட்டனர். அதிலும், அனைவரிடமும் இயல்பாக பழகும் விஷாலுக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அவர்களில், ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட சிலர் விஷாலுக்கு உயிர் நண்பர்களாகி விட்டனர். அதில் விக்ராந்துக்கு தான் நடித்த பாண்டிய நாடு படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்தார். அதோடு, விஷ்ணுவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர், தற்போது அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் ஜீவா படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் ரிலீஸ் செய்ய முன்வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது நிறுவனத்தின் மூலம் இதுவரை பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களைத் தொடர்ந்து இப்போது பூஜை படத்தையும் தயாரித்து நடித்து வரும் விஷால், அடுத்தபடியாக விஷ்ணு-விக்ராந்தை இணைத்து ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம். தேவைப்பட்டால் அந்த படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க திட்டமிட்டுள்ள விஷால், தற்போது கதை கேட்கும் படலத்தையும் தொடங்கியிருக்கிறார்.