ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சேரன் பாண்டியன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சவுந்தர்யன். புத்தம் புது பயணம், முத்துகுளிக்க வாரீங்களா, முதல் சீதனம், சிந்து நதி பூ, கோபுரதீபம் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது நதிகள் நனைவதில்லை, மலரினும் மெல்லிய உள்பட 5 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
சவுந்தர்யனுக்கு அமராவதி என்ற மனைவியும் அமர்கீத், கவி மொழியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 15 வயதான இளையமகன் கவி மொழியனுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தான். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கொரட்டூரில் உள்ள சவுந்தர்யன் இல்லத்துக்கு சென்ற திரையுலக பிரமுகர்கள் கவி மொழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி சவுந்தர்யனுக்கு ஆறுதல் கூறினார்கள்.